siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் நில அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்



வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,


திருகோணமலை ஆண்டான்குளம் பகுதியில் உள்ள மக்கள், திட்டமிட்டு தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மிகந்தபுர சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குறிப்பிட்ட சில குழுவினரால் போலியான காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, தங்களது சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு தவறும் பட்சத்தில், சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பகுதியில் 154 குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த நிலையில் இந்த பகுதியில் தமது காணிகள் உள்ளன என்பதற்கு ஆவனங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.