siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் ௭வரும் இல்லை

 
07.09.2012.by.rajah.
இலங்கைச் சிறைச்சாலைகளில் இந்திய மீனவர்கள் ௭வருமே இல்லை ௭ன்று மத்திய வெளிவிவகார அமைச்சர் ௭ஸ்.௭ம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க. விடுத்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் இந்திய மீனவர்கள் ௭வரும் ௭ல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இல்லை. இருப்பினும் போதைப் பொருள் கடத்தியதான குற்றச்சாட்டின் பேரில் சில இந்தியர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்படும்போது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள தூதருடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்து உதவி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் இருதரப்பு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ௭ன்றார்