siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 13 அக்டோபர், 2012

இளம் வயது உடைய கர்ப்பிணிப் பெண்களை

         
Saturday 13 October 2012 .By.Rajah.
கற்பழிக்க பார்க்கும் அரச வைத்தியர்! இளம் வயது உடைய கர்ப்பிணித் தாய்மார்களை மருத்துவ பரிசோதனை என்கிற பெயரில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முயன்று வருகின்ற அரச வைத்தியர் ஒருவர் குறித்து ஹற்றன் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.
இவரது துஷ்பிரயோக முயற்சிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் அநேகர் பொலிஸில் முறைப்பாடு செய்து உள்ளனர்.
வைத்தியரால் இலக்கு வைக்கப்படுகின்ற பெண்கள் பெரும்பாலும் 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிகின்றது.
கிளினிக்கு கர்ப்பிணிப் பெண்கள் மாதத்தில் இரு தடவைகள் வர வேண்டி உள்ளது என்றும் உடல் சோதனைகளுக்கு இப்பெண்களை உட்படுத்துகின்றபோது தாதிமாரை வைத்தியர் வெளியில் அனுப்பி விடுகின்றார் என்றும் முறைப்பாடுகளில் சொல்லப்பட்டு உள்ளது