siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 6 நவம்பர், 2012

சிரியாவில் காரில் குண்டு வைத்து தாக்குதல்: 50 பேர் பலி

06.11.2012.By.Rajah.சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள இராணுவ படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
.சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இருதரப்புகளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.
இந்த கார் குண்டுத்தாக்குதலில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்த போதிலும் 50ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தலைநகர் டமஸ்கசில் அரசின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள மேற்குப்பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு கார்குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து அரசாங்கப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு எல்லையில் உள்ள ஹரிம் நகரில் விமானப்படை தாக்குதலில் 20 புரட்சிப்படையினர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக