siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 6 நவம்பர், 2012

விவேகானந்தர் பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் கட்காரி?

          
By.Rajaj.06-11.2012.நாக்பூரில் நடைபெற்ற விழாவில், பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, விவேகானந்தரின் அறிவுத்திறனை, கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமின் அறிவுத் திறனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
சர்ச்சைக்குரிய இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவரது கட்சியில் உள்ள தலைவர்களே அவரது கருத்தை எதிர்த்துள்ளனர். கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து மகேஷ் ஜெத்மலானி விலகினார். கட்காரி பதவி விலக வேண்டும் என்று ராம்ஜெத்மலானி இன்று வலியுறுத்தினார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அத்வானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து கட்காரி விவகாரம் குறித்து இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தன் மீதான குற்றச்சாட்டை கட்காரி மறுத்து வந்த நிலையில், இதற்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக