siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 6 நவம்பர், 2012

கண்டெடுக்கப்பட்ட மர்ம வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு. ???


06.11.2012.By.Rajah.கனடாவில் வான்கூவர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் New Westminster SkyTrain Station தண்டவாளத்தில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சலால் அந்த பகுதியே பரபரப்பு அடைந்தது. இரயில் பயணி ஒருவர் எடுத்த அந்த பார்சலில் அபாயகரமான பொருள் ஏதேனும் இருக்கும் என அஞ்சிய ரயில்வே துறையினர், உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இரவு 9.30 மணிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த மர்ம பார்சலை சோதனையிட்டதில், அந்த பார்சலில் 35 செ.மீ நீளமுள்ள ஒரு இரும்பு பைப் ஒன்றில் வெடிபொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அது ரிமோட்டால் இயக்கி வெடிக்கத்தக்க வகையான வெடிகுண்டு என்பதையும் கண்டுபிடித்தனர். பின்னர் ரோபோட் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த பரபரப்பு காரணமாக அந்த வழியே செல்லும் இரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் இரவு 11.30 மணிக்கு மேல் வேறு எந்த வகை வெடிபொருட்களும் ரயில் பாதையில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே போக்குவரத்துக்காக இரயில்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த வாரத்திலேயே வெடிபொருட்களை இரயில் தண்டவாளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது இது இரண்டாவது முறையாகும். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அனைத்து இரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக