siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 4 ஜனவரி, 2013

பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2012 மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ராஜேஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியான ராஜேஸ் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுசீந்திர குமார் தீர்ப்பளித்தார்.
நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டுமென சமூகத்தின் புறத்திலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

கருத்துரையிடுக