siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 3 மே, 2013

மாட்டு இறைச்சியில் எலிக்கறி, நரிக்கறி கலப்படம்: 904 பேர்


சீனாவில் எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை மாட்டு இறைச்சியில் கலப்படம் செய்து விற்று வந்த 904 நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சீனாவில் விற்கப்பட்டு வருகின்ற பதப்படுத்திய இறைச்சி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.
இதனால் சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில், எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை கலப்படம் செய்து பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 25ம் திகதியில் இருந்து இதுரை சுமார் 20 ஆயிரம் தொன் கலப்பட இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 904 பேரை இந்த வழக்குகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக