siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 27 ஜூலை, 2013

குர்ஹாம் சாக்கி சம்பவத்திற்காக அமைச்சர் பசில்


பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலைச் சம்பத்திற்காக, இலங்iயின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வருத்தம் வெளியிட்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார். குர்ஹாம் சாக்கீ படுகொலை மற்றும் அவரது ரஸ்ய காதலி தாக்கப்பட்டமைக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வி எழுப்ப உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குர்ஹாம் சாக்கீ கொலை குறித்த விசாரணைகள் நிறைவடையாவிட்டால் அது குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது கேள்வி எழுப்ப வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று குர்ஹாம் சாக்கீ மற்றும் அவரது ரஸ்ய காதலி தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தன்னார்வ தொண்டரான குர்ஹாம் சாக்கீ படுகொலை செய்யப்பட்டார்

0 comments:

கருத்துரையிடுக