siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 27 ஜூலை, 2013

மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து கற்பழித்த காமூகன்


அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக மூன்று பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து கற்பழித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தை சேர்ந்தவர் ஏரியல் காஸ்ட்ரோ(வயது 53).
இவன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட்(வயது 20 ),அமெண்டா பெர்ரி(வயது 17), கினா டிஜெசஸ்(வயது 14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தான்.
இவர்களை கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக வெளியே விடாமல் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளான்.
இதில் பெண் ஒருவர் கர்ப்பமான போது, கருவை கலைக்கும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டுள்ளான்.
இந்நிலையில் கடந்த மே மாதம், மூன்று பெண்களில் ஒருவர் தப்பித்து வந்த போது தான், இவனின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் காஸ்ட்ரோவை கைது செய்ததுடன், மற்ற பெண்களையும், பெர்ரிக்கு பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்தனர்.
 

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், காஸ்ட்ரோவுக்கு ஜாமினில் வெளியே வராதபடி, ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவனது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

0 comments:

கருத்துரையிடுக