siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 27 ஜூலை, 2013

தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர்கள் தப்பியோட்டம்


இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும், ஆறு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றாhகள் என்பது புரியவில்லை என முகாம் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக