siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண்

31.08.2012.BY-rajah.
அமெரிக்காவில் 14 வயதுப் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார்.
ட்ந்
சம்பந்தப்பட்ட சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அந்தப் பையனுடன் பிரிட்டானி கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உறவு வைத்து வந்துள்ளார். இருவரும் விருப்பத்துன்தான் உறவு கொண்டுள்ளனர். தனது வீட்டுக்கு அருகில்தான் இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது அந்தப் பையன் கூறுகையில்,எனது சம்மதத்துடன்தான் இந்த உறவு நீடித்தது. இருவரும் மனம் ஒத்துப் போய்தான் இதில் ஈடுபட்டோம். பிரிட்டானி கர்ப்பமடைந்தது எனக்குத் தெரியும். அவர் வைத்தியரிடம் சென்றபோது நானும் உடன் போனேன் என்று கூறியுள்ளான்.

சம்மதத்துடன் நடந்த உறவு என்றாலும் கூட பென்சில்வேனியா சட்டப்படி சிறுவனுக்கு 14 வயதுதான் ஆகிறது என்பதால் இதை சட்டப்படி ஏற்க முடியாது என்பதால் பிரிட்டானி கைது செய்யப்பட்டுள்ளார்