siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க இந்திய கடலோர கண்காணிப்பு

 
 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.
இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு புதிதாக ராஜ்கிரன் என்ற கண்காணிப்பு கப்பல் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடல் வழியாக கடத்தல், அன்னிய நாட்டு மோசடிகளை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்கள் நலன் காத்தல் போன்ற பணிகளில் கடலோரகாவல் படை ஈடுபட்டு வருகிறது.
இந்த பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புதிய கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
ராஜ்கிரண் என்ற பெயர் கொண்ட புதிய கப்பலை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் உலக தரத்துக்கு வடிவமைத்துள்ளது.
50 மீட்டர் நீளமும், 300 டன் எடையும் கொண்ட ராஜ்கிரண் கப்பல் மூலம் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையிலும் பணி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
பொதுவாக, 16 கடல் மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த கண்காணிப்பு கப்பல் இலங்கை கடல் எல்லை உள்ளடங்கலாக, 1500 கடல்மைல் பரப்பளவு உள்ள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது