siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY.rajah.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் தோட்டாக்கள் தாக்கியதில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல்கள் நொறுங்கின. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொலிசார் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம ஆசாமி உள்ளிட்ட 3 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது