siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 செப்டம்பர், 2012

அமெரிக்கா நாடாளுமன்ற பிரேரணையை தோற்கடிக்க இலங்கை முயற்சி

 
 
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கையின் மீது சர்வதேச விசாரணையைக்கோரும் பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கைக்கு ஆதரவான காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு இந்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் போர் இடம்பெற்ற வேளையில் போர்க்குற்றங்கள் புரியப்பட்டதாக கூறி, அதனை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையை கோரி, காங்கிரஸின் பிரதிநிதிகள் சிலர் கடந்த 7 ஆம் திகதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பிரேரணையை முன்வைத்தனர்.
அத்துடன் இந்தப் பிரேரணையில் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உட்பட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன.