siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 செப்டம்பர், 2012

யாழ்.மாவிட்டபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரை காணவில்லை

 
 
சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் சேர்ந்த மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ. மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் திகதி பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்ற மாணவன் வீட்டிலிருந்து புறப்பட்டு, இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது