siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் பொலிஸாரால் மீட்பு

07.10.2012.By.Rajah.கிளிநொச்சியில்இருந்து சட்டவிரோதமாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்ட 20 மாடுகளை நேற்று முன்தினம் யாழ்.பொலிஸார் கைப்பற்றினர். இந்த மாடுகள் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வரப்பட்டிருந்தன என்று பொலிஸார் கூறினர்.
யாழ்.பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் யாழ்.மனோகராச் சந்தியில் வைத்து பொலிஸார் இந்த மாடுகளைக் கைப்பற்றினர்.
மாடுகளைச் சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு வந்தவர்களைப் பொலிஸார் விசாரணைக்காகப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அத்துடன் மாடுகளும் யாழ்.பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன