siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 8 அக்டோபர், 2012

பாலிவுட் வாய்ப்பை எதிர்நோக்கி பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளும் சனா கான்

 Monday, 08 October 2012, By.Rajah.
பாலிவுட் ஹீரோ சல்மான் கான் ‘பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சிவில் வெளிநபர்கள் தொடர்பில்லாமல் பூட்டிய வீட்டுக்குள் 1 மாதம் தங்கியிருக்க வேண்டும். ரசிகர்கள் இவர்களது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருப்பர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கொலிவுட் நடிகை சனா கானுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து இவர் கூறுகையில், பிக் பாஸ் ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. உடனே ஒப்புக்கொண்டேன்.
இந்த ஷோவில் பங்கேற்கும்போது உடன் தங்கி இருப்பவர்களுடன் கருத்துவேறுபாடு, மோதல், கெட்ட வார்த்தைகள் பிரயோகம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்குமே என்கிறார்கள்.
இதற்கு முன்வேண்டுமானால் அந்த கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். தற்போது நிலைமை மாறி இருக்கிறது.
இதில் பங்கேற்பவர்கள் நல்லமுறையில் பழகுபவர்களாக இருக்கிறார்கள்.
ஒரே விடயம் என்னவென்றால் 24 மணி நேரமும் என்னை ரசிகர்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே உடை விடயத்தில் கவனமாக இருப்பேன் என்றும் இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்