siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 டிசம்பர், 2012

அமெரிக்காவில் பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி


அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில், 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடத்திய நபரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கவர்னர் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பொலிசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.
சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் பொலிசார் தீவர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.
பொலிசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் பொலிசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர், இந்த துயரமான சம்பவத்திற்கு ஜனாதிபதி சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார.{காணொளி,புகைப்படங்கள்,}


 



;">



 





0 comments:

கருத்துரையிடுக