siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து டிசம்பர் 21ம் திகதி நான்கு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் கச்சதீவு அருகே சென்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நீதிபதி உத்தரவுபடி 26ம் திகதி வரை தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் 27ம் திகதி விடுவிக்கப்பட்டனர்.
மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சர்வதேச கடல் எல்லையில் மண்டபம் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.
நேற்று காலை இராமநாதபுரம் மண்டபம் அழைத்து வரப்பட்ட அவர்கள், விசாரணைக்குப் பின் மீன் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

0 comments:

கருத்துரையிடுக