siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு பயிற்சி

பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் உயிரிழப்பை அடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை முழுமையாக காவல்துறையால் மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது.
பொது மக்களின் ஆதரவும் அவசியம், இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் பெண் பொலிசாருக்கும் கல்லூரி மாணவிகளுக்கும் தற்காப்புக் கலை கற்றுத்தரப்படவுள்ளது.
இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத் தலைவிகள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
பயிற்சி பெற விரும்புபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பொலிஸ் தலைமை அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
தற்காப்பின் முதற்கட்டமாக பெண்கள் மிளகுத்தூள், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேக்களை எப்போதும் தங்களுடன் கொண்டுசெல்ல வேண்டும்.
இந்த உபகபரணங்கள் மூலம் ஆறு அடிக்கு அப்பால் இருந்தே எதிராளிகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என மகாராஷ்டிரா புனே மாநகர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக