siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்கிற்கு விஜயம்


 26.08.2012.
இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 31500 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்
போர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். 2011 ஜூலை மாதத்திற்கு பின்னர் நூற்றிற்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 51 400 கடவுச் சீட்டுகளை வைத்திருப்போர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்திற்கும் சென்று வந்துள்ளனர்.
அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாகும். இவர்கள் தமது பரம்பரையினரின் வீடுகளையும் சொத்துக்களையும்நெருங்கிய உறவினரையும் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவ
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு
செயலர் ராஜபக்ஷ இத்தகவலை வெளியிட்டார்