siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கும் அஞ்சலி


Sunday, 26 August 2012,
நடிகை அஞ்சலி தனது ஒவ்வொரு படமும் வெளியாகும் போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க புறப்படுகிறார்.
தென்னிந்திய நடிகை அஞ்சலி தற்போது தெலுங்கில் ஒரு படமும் தமிழில் 3 படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ஆர்யாவுடன் சேட்டை படத்திலும் சுந்தர்.சி இயக்கத்தில் எம்.ஜி.ஆர் படத்திலும் கரிகாலன் என்ற படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து வருகின்றார்.
ஏற்கனவே அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு போன்ற படங்களின் வெற்றியே இந்த புதிய படங்களுக்கான வாய்ப்பு என்றுகூட சொல்லலாம்.
ஏனெனில் தற்போது அஞ்சலி நடித்து வருகின்ற 3 படங்களும் பெரிய இயக்குனர்கள், முன்னணி நடிகர்களின் படமாகும்.
இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது தன்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாகும் போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க சென்று விடுகிறார் அஞ்சலி.
திருப்பதி பகவானின் அருளால் இந்த படங்கள் வெற்றியடைவதாகவும் நடிகை அஞ்சலி நம்புகிறார்