siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சுயாதீனமாக கடமையாற்ற முடியாமையே பதவி விலகக் காரணம்: திலக் கருணாரட்ன




வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,


சுயாதீனமாக கடயைமாற்ற முடியாத காரணத்தினால் பதவி விலகுகின்றேன் என கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தையை சீரழித்த சிலரினால் எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. நிதி அமைச்சின் ஊடாக எனது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன்.

பங்குச் சந்தையை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை.
சுயாதீனமாக செயற்படக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.