siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சென்னையின் புகழ் பாடும் சிம்பு

17.08.2012.
சிங்கார சென்னையின் புகழை சொல்லும் ஆன்தம் ஒன்றை சிம்பு பாடியுள்ளார். இந்த ஆன்தம் யுரியூப்பில் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் போடா போடி, வேட்டை மன்னன், வாலு போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இதற்கிடையில் மதில் மேல் பூனை என்ற படத்தை விளம்பரப்படுத்தும் பாடலாக இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாடல் சென்னைவாசிகளை ஈர்க்கும் படியாக அமைந்துள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் சிம்புவின் அடுத்த ஆன்தம் தயாராகி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது யுரியூப்பில் சென்னையைப் பற்றி மட்டும் குறிப்பிடும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் ஊரு எனத் தொடங்கும் இப்பாடல் வரிகள் சென்னைவாசிகளின் மனதில் பதியும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் மெரினா என்ற படத்தில் சென்னையின் புகழை விளக்கும் பாடலொன்றை காட்சிப்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது