siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

பத்மப்ரியாவால் ஏற்பட்ட பிரச்சினை

17.08.2012.
நடிகை பத்மப்ரியா ஊதிய விடயத்தில் தனது மேலாளருக்கு பரிந்து பேசியதால் கேரளா சினிமா துறையில் மேலாளர்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதுகேரளா சினிமாவில் நடிகர்- நடிகைகளின் மேலாளர்கள் தயாரிப்பாளர்களிடமே சம்பளம் வாங்குகின்றனர்.
இவர்களின் சம்பள விடயத்தில் குழப்பம் செய்தால் நடிகர்- நடிகைகளின் திகதிகளை தாமதப்படுத்துவர். இப்பிரச்சினை நீண்ட காலம் கேரளா சினிமாவில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் மலையாளத்தில் ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தில் பத்மப்ரியா நடிக்கிறார்.
இப்படத்தை நிஷாத் இயக்குகிறார். இப்படத்தை முடித்து கொடுப்பதற்கு பத்மப்ரியா தனது மேலாளருக்கு கொடுக்க கூடுதல் பணம் தரவேண்டும் என இயக்குனரை நிர்பந்தம் செய்துள்ளார்.
இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பத்மப்ரியா மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் மேலாளர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
சம்பள விடயங்கள் குறித்து நடிகர்- நடிகைகளிடம் நேரில்தான் பேசவேண்டும் என்றும் தீர்மானித்து உள்ளனர்