siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சீனாவில் பள்ளியில் புகுந்து குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம ஆசாமி: 3 பேர் பலி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012
By.Rajah.சீனாவில் ஆரம்ப பள்ளியின் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென் பகுதியில் வியட்னாம் எல்லையையொட்டி பிங்னான் என்ற நகரம் அமைந்துள்ளது.
இங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் மதிய உணவு இடைவேளையின் போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோடாரியுடன் வந்த மர்ம நபர் திடீரென குழந்தைகளை தாக்கினார்.
இதில் 6 வயது முதல் 12 வயதுள்ள 3 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர், மேலும் 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட வியூ என்ற நபரை பொலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மனநோயாளிகள் மையத்தில் இருந்து தப்பி வந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் ஏன் தாக்குதல் நடத்தினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை