siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வேலியை தாண்டி கூண்டுக்குள் குதித்த நபரை கடித்து குதறிய புலி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012
By.Rajah.அமெரிக்காவில் கூண்டுக்குள் குதித்த வாலிபரை புலி கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் புலிகள் இருக்கும் பகுதிக்குள் வேலியை தாண்டி ஒருவர் குதித்துள்ளார்.
அதைக் கண்ட 12 வயது புலி ஒன்று அவரை கடித்து குதறியது. அவரது மரண ஓலத்தைக் கேட்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கார்பன்டை ஆக்சைடு தீயணைப்பு கருவி மூலம் காற்றை பீய்ச்சி அடித்து அந்த புலி அவரை விட்டு விலகிச் செல்லுமாறு செய்தனர்.
பின்னர் அந்த இளைஞரை வேலிக்கு கீழே இருக்கும் சிறிய இடைவெளி வழியாக வருமாறு கூறி மீட்டனர்.