siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை விடுதலை

23.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ மாகாணத்தில் 15 வயது மாணவனுடன் தவறான உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயது ஆசிரியை குற்றமற்றவர் என கூறி டொரண்டோ நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 42 வயதான Mary Gowans என்ற ஆசிரியை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 15 வயது மாணவன் கொடுத்த புகாரினால், அந்த ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது ஆசிரியை Mary Gowans தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அவர் கூறுகையில், அந்த சிறுவன் தான் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டான் என்றும், தனக்கு அதிகளவான காதல் குறுஞ்செய்திகளை அனுப்பினான் என்றும் தெரிவித்தார்.
இதற்கு தான் உடன்படாததால் தன் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளான் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியதை அந்த ஆசிரியை நிரூபித்ததால், ஆசிரியர் குற்றமற்றவர் என கூறி விடுதலை செய்வதாக டொரண்டோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது