siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

அழகு நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,By.Rajah.[காணொளி,புகைப்படங்கள்,]
அமெரிக்காவில் பிரபல அழகு நிலையம் ஒன்றில் மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர், 7 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி நகரில் புரூக்பீல்டு ஸ்கொயர் என்ற ஷாப்பிங் மால் உள்ளது.
இந்த மாலுக்கு புகுந்த மர்ம மனிதன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலியாயினர், 7 பேர் காயமுற்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் அந்த இடத்திலேயே இருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்த வந்த பொலிசார் சுற்றி வளைத்தனர். இருப்பினும் அந்நபர் தப்பி சென்று விட்டார்.
6 அடி உயரமுள்ள கருப்பின இளைஞர் ஒருவரின் செயலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே மில்வாக்கி நகரில் உள்ள குருத்வாராவில் பக்தர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். திரையரங்கிலும் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.