siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

டொரண்டோ: நடைபாதையில் தனியாக சென்ற பெண்ணிடம் செக்ஸ்


Monday22October2012By.Rajah. சில்மிஷம் செய்த 15 வயது சிறுவன் கைது டொரண்டோவில் 15 வயது சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் செக்ஸ் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.
டொரண்டோவின் Bloor and Christie area என்ற பகுதியில் சென்ற சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நடைபாதையில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். Youth Criminal Justice Act விதிகளின்படி சிறுவன் மைனராக இருப்பதால், அவனுடைய பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் அவன் மேல் மொத்தம் 14 கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டொரண்டோ காவல்துறை அதிகாரி Bill Blair திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை தெரிவித்த அவர், இந்த சிறுவன் செய்த குற்றத்திற்கு சிறுவனை மட்டும் குறைகூற முடியாது என்றும், அவன் வளர்க்கப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுகிறது என்றும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டியது அவர்களது கடமை என்றும் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை திங்கட்கிழமை மாலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்