siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

மனைவியின் மர்ம உறுப்பை வெட்டி கொலை


  Monday 22 October 2012 .By.Rajah.செய்த கொடூர கணவன்! மர்ம உறுப்பு வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் பலாங்கொடை - மேல் பலாங்கொடை தோட்ட வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை பொலிஸாருக்கு இன்று (22) காலை 06.05 அளவில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பலாங்கொடை மேல் தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வெள்ளசாமி பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே அவரை மர்ம உறுப்பில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பலாங்கொடை நீதவான் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்