siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 22 அக்டோபர், 2012

போஸ்னியாவில் இரும்பு பாலம் திருட்டு: மக்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012,Ba.Rajah.{புகைப்படங்கள்],
போஸ்னியா நாட்டில் இரும்பு பாலத்தை திருடி சென்றவனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது பிராக்கோ. விளைநிலங்கள் சூழ்ந்த இப்பகுதியில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது.
80ஆம் ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த வாரம் காணாமல் போனது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர்.
வழக்கமாக கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகளை திருடும் நபர் ஒருவர் மீது பொலிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
29 வயதுடைய அந்த திருடனின் வீட்டுக்கு வெளியே திருடப்பட்ட பாலம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த திருடனை பொலிசார் கைது செய்தனர். கழிவு நீர் கால்வாய் மூடிகளை திருடி வந்த திருடன் பெரிய தொகையை சம்பாதிக்கும் நோக்கில், இரும்பு பாலத்தையே பெயர்த்து எடுத்து சென்றதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.