siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 16 அக்டோபர், 2012

நயன்தாரா சொல்லும் ஐடியா??

ஸ்ரீ ராமஜெயம் படத்தில் சீதாபிராட்டியாக நடித்து ஆந்திராவின் நந்தி விருதை வென்ற நயன்தாரா, சிறந்த நடிகையாக உருவாவது குறித்து பேசியுள்ளார். மேலும் இது குறித்து, ஸ்ரீ ராம ஜெயம் படத்தில் நடித்ததை தெய்வீக அனுபவமாக உணந்தேன். என் கலை வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகுமென நயன்தாரா தெரிவித்தார். சீதா தேவியாக நடித்ததால் நந்தி எனக்கு கிடைத்துள்ளது. சீதா கதாபாத்திரமாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையடைகிறேன். எவ்வளோவோ சர்ச்சைகள் வந்த போதும் பாலகிருஷ்ணா, தயாரிப்பாளர் சாய் பாபு, இயக்குனர் பாபு இவர்களின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலும் என்னால் சீதாவாக நடிக்க முடிந்தது. நான் மீண்டும் சீதாவாக நடிப்பேன் என்றும் எந்தவித இந்திய புராணப் பாத்திரங்களையும் ஏற்று என்னால் நடிக்க முடியும். கமர்சியல் படங்களில் மட்டுமின்றி நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதால் சிறந்த நடிகையாக உருவாக முடியும் என்கிறார் நயன்தாரா.