siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 16 அக்டோபர், 2012

தலிபான்களால் சுடப்பட்ட மாணவி சிகிச்சைக்காக



Tuesday  16  October  2012 By.Rajah..லண்டன் பயணம்
தலிபான்களால் சுடப்பட்ட, பள்ளி மாணவிக்கு, லண்டனில் சிகிச்சையளிக்கப்படுகிறது. பாகிஸ்தானின், பழங்குடிகள் அதிகம் வசிக்கும், ஸ்வாட் மாவட்டத்தின், மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய், 14. அமைதி குறித்து, பல்வேறு பேச்சுப் போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் மலாலா.

பள்ளி மாணவியான மலாலா, கடந்த வாரம், பேருந்தில் வீட்டுக்கு செல்ல காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள், மலாலாவை இரண்டு முறை சுட்டனர். இதில், தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அறுவை சிகிச்சை மூலம், இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேல்சிகிச்சைக்காக, மலாலா, நேற்று லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட் அளித்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம், மலாலா, லண்டன் சென்றார். அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது, பாதுகாப்பு காரணங்களையொட்டி, ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.