siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 டிசம்பர், 2012

பெண்ணுடன் கள்ள உறவு: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்

பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக புகார் எழுந்ததால், சிங்கப்பூர் நாடாளுன்ற சபாநாயகர் மைக்கேல் பால்மர் பதவி விலகினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தவர் மைக்கேல் பால்மர்.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பால்மர், தனது தொகுதி அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், தகாத உறவு வைத்திருந்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் என கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனை தொடர்ந்து தானும் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் பால்மர் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் செய்தது தவறு தான். என்னுடைய ஒழுக்க கேட்டினால் கட்சிக்கு களங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை. எனவே பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.{காணொளி, }

0 comments:

கருத்துரையிடுக