siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 டிசம்பர், 2012

குஷ்பு மார்பில் இந்து மத கடவுள்கள்: புதிய சர்ச்சை???

இந்து மத கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் பதித்த சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ், நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார்.
அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்துக் கடவுள் படங்கள் உள்ளன.
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார்.
இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தெரிந்தே செய்திருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குஷ்பு, ருத்ராட்ச மாலையில் பெரிய பிளாஸ்டிக் தாலியைக் கோர்த்து அணிந்து வந்து சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

கருத்துரையிடுக