siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 டிசம்பர், 2012

O/L பரீட்சை எழுதிய மாணவி உட்பட இருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை

 
 
.
மட்டக்களப்பு மாவட்டத்­தின் இரு வேறு பகுதிகளில் இரு­வர் தூக்கில் தொங்கிய நிலை­யில் சடலமாக மீட்­கப்பட்­டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட மாங்காடு பகுதியில் செவ்வாய்க்­கிழமை பிற்பகல் ஜி.சீ.ஈ. சாதா­ரணதரப் பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்­கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்­டார்.
மாங்காடு விஸ்ணு ஆலய வீதி­யில் உள்ள வீட்டில் வினோ­தினி (வயது - 16) என்ற மாண­வியே இவ்வாறு தூக்­கில் தொங்­கிய நிலையில் சடலமாக மீட்­கப்பட்டார் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சை முடிந்து வீட்டுக்கு­வந்த குறித்த மாணவி உண­வருந்­திய­வேளை­யில் வீட்டில் உள்­ளோர் தமது தோட்டத்துக்குச் சென்­றுள்ளனர். இந்தவேளை­யில் தோட்டத்தில் இருந்து வீடு திரும்பிய பெற்றோர் மகள் சடல­மாக தூக்கில் தொங்கு­வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பில் களுவாஞ்­சிக்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்­ட­தைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்­களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பிலான விசார­ணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்­றனர்.
இதேவேளை, பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்­குடாவில் உள்ள விளையாட்டு மைதா­னத்­தானத்துக்கு அருகில் உள்ள மரத்­தில் இருந்து நேற்று புதன்கிழமை காலை இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் சடல­மாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் காஞ்சிரங்­குடாவை சேர்ந்த ப.ஜெகன் (வயது - 22) என அடையாளம் காணப்பட்­டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்பக்­கட்ட விசாரணையில்

0 comments:

கருத்துரையிடுக