siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

20000 பொலிஸார் பாதுகாப்பில் மூன்று மாகாண சபைத் தேர்தல்

13.08.2012.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் செயலகத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குறித்த மாகாணங்களில் தேர்தல் தொடர்பில் சிறிய சம்பவங்கள் சிலவே பதிவாகியுள்ளதுடன், பாரிய வன்முறைகள் நடைபெற்றதாக எந்த ஒரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் தேர்தல் நடவடிக்கைகள் இதுவரை அமைதியாகவே காணப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 

0 comments:

கருத்துரையிடுக