siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஐ.நா பாதுகாப்பு சபையில் புதிதாக 5 நாடுகள் சேர்ப்பு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012.By.Rajah.
ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 5 புதிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ருவாண்டா, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா, தென் கொரியா மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய 5 நாடுகளே நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிக்கும்.
இப்போது நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா, கொலம்பியா, ஜேர்மனி, போர்ச்சுகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி தேர்தல் நடைபெற்றது.
நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில், ஐ.நா பொது சபையில் மொத்தம் உள்ள 193 உறுப்பினர்களில் 129 வாக்குகள் அல்லது மூன்றில் 2 பங்கு வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும், 5 நிரந்தர உறுப்பினர்களும் உள்ளனர்.
அஜர்பெய்ஜான், கெளதமாலா, மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் டோகோ ஆகிய மற்ற நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.