siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக

         
Friday 19 October 2012  By.Rajah.
நடை பயணம் மேற்கொண்ட கனேடிய பெண்யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி வரும் யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் நிறுவனத்துக்கு நிதி சேகரிக்க மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணம் மேற்கொண்ட கனேடியப் பெண்மணிக்கு இன்று வியாழக்கிழமை பருத்தித்துறையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
கனடாவைச் சேர்ந்த திருமதி ஒசாசாய அகஸ்ரின் அம்மையார் இந்நிதி உதவி பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி மாத்தறை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார்.

இவர் சுமார் 820 கிலோ மீற்றர் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஜெய்பூர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இவ் வரவேற்பு நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது