siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 அக்டோபர், 2012

காதல் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை சொல்லும் "நீங்காத எண்ணம்"

 Friday, 19 October 2012, By.Rajah.
சஞ்சனா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.சஞ்சய் பிரகாஷ் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் "நீங்காத எண்ணம்".
இப்படத்தில் கதாநாயகனாக ஜெயந்த் நடிக்கிறார். இவர் நடிகர் பானுசந்தர் மகன் ஆவார். கதாநாயகியாக புதுமுகம் அங்கீதா நடிக்கிறார்.
இவர்களுடன் ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், டி.பி.கஜேந்திரன், மணிகுட்டி, சந்துரு, பாலாஜி, ரிஷா, மீரா கிருஷ்ணன், வைஜந்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஷாஜகான், செல்வராஜ் என்று இரு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.
படம் குறித்து இயக்குனர்கள் கூறுகையில், பெரிய ஜமீன் குடும்பமான ஜெயபிரகாஷ் - சரண்யா தம்பதியின் மகள் அங்கீதா.
சாதாரண குடும்பமான தலைவாசல் விஜய் - மீரா கிருஷ்ணனின் மகன் ஜெயந்த்.
ஜெயந்த் - அங்கீதா இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
அவர்கள் காதலுக்கு அந்தஸ்து தடையாக இல்லை. ஆனாலும் அவர்கள் பிரிய நேர்கிறது.
அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம்? மீண்டும் சேர்ந்தார்களா? என்பதை குடும்ப செண்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறோம்.
எல்லோரும் ரசிக்கும் படியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
முழுக்க முழுக்க புதுக்கோட்டை மாவட்டத்திலேயே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் என்றும் சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.