siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 அக்டோபர், 2012

விமான நிலையத்தில் தவித்த சூர்யா, அனுஷ்கா

 Friday, 19 October 2012, By.Rajah.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிக்கும் சிங்கம்- 2 படப்பிடிப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவருவதால் நகர் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தின் வளாகம் மற்றும் விமான ஓடு பாதையிலும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை சென்னை திரும்புவதற்காக சூர்யா, அனுஷ்கா இருவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் ஓடுபாதையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காரணத்தினால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டபடி இருந்தது.
பின்பு அந்த விமானம் மதுரைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் சூர்யாவும் அனுஷ்காவும் விமானத்தில் ஏற முடியவில்லை. காரின் மூலமே சென்னை சென்றனர்.