siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 அக்டோபர், 2012

பள்ளிக்கு செல்லும் ஒபாமா மகள்களுக்கு தொலைபேசியில் மிரட்டல்

Friday, 19 October 2012,.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா- மிஷெல் தம்பதிக்கு மாலியா (வயது 14), சாஷா (வயது 11) என்று இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள “சித்வெல் பிரண்ட்ஸ்” என்ற தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.
இந்நிலையில், இவர்கள் படிக்கும் பள்ளிக்கு நேற்று தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களது பேக்குகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஆனால், ஆபத்தான பொருள் எதுவும் இல்லை.
இதுகுறித்து பள்ளியின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் தொலைபேசியில் எவ்வித மிரட்டல் வந்தது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
வெள்ளை மாளிகையிலும் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 6ம் திகதி நடைபெற உள்ளது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.
போட்டி கடுமையாக உள்ள இந்நிலையில் ஒபாமா மகள்கள் படிக்கும் பள்ளிக்கு மிரட்டல் வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.