siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

இலங்கையில் நாளாந்தம் 650 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,புகைத்ததல், மதுபானம் மற்றும் அதீத கொழுப்புணவின் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 650 பேர் பலியவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் பாலித மகிபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 1250 குழந்தைகள் பிரசவம் ஆகின்றன. அதேவேளை அண்ணளவாக 1000 மரண சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மரணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட முடியாத நோய்களினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது