siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

வவுனியா மீள்குடியேற்ற மக்களுக்காக ஜப்பான் உதவி

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாராத்தை அதிகரிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்காக 11 மில்லியன் ரூபாய்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக ஒரு லட்சம் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்திடம் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் கொழும்பு தூதரகத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள சுமார் 625 குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை ஜப்பான் தூதுவர் நொபியிடோ ஹோபோ மற்றும் மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் பிரியந்த குமார ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது