siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தில் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் திருச் சொருபம் ஸ்தாபிப்பு

22.08.2012அதி வணக்கத்திற்குரிய 16ஆவது ஆசிர்வாதப்பரின் ஆலோசனைக்கிணங்க தலவில புனித அன்னம்மாள் புனிதத்தலத்தில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் திருச் சொருபம் ஒன்று அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவினால் வழங்கப்பட்டது.
இந்த திருச்சொருபமானது, சமீபத்தில் கொண்டாடப்பட்ட தலவில ஆலயத்தின் 250வது ஆண்டு பூர்த்தி விழாவின் போது சிலாபம் ஆயர் அதி வண. வெலன்ஸ் மென்டிஸ் மற்றும் குறித்த ஆலயத்தின் தந்தை அதி வண. லூக் நெல்ஸன் ஆகியோரால் ஆசிர்வதிக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கையின் சம்பிரதாயங்களுக்கமைவாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட சிற்பக் கலைஞர்கள் உருவாக்கிய இந்த திருச் சொருபத்தின் சிறியது ஒன்று இலங்கை கத்தோலிக்கர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரோம் - வத்திக்கான் நகரில் வைத்து பரிசுத்த தந்தை அவர்களுக்கு டாக்டர் ஜயலத் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.