siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

குகன், லலித் ஆகியோரை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, யாழ்ப்பாண மனித உரிமை செயற்பட்டாளர்களான குகன் மற்றும் லலித் ஆகியோரை உடனடியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனிதாபிமான தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அஜித் குமார நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் குறித்த இருவரும் கடத்தி செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாளாந்தம் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்களது வாழ்விடத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட செயற்பட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் உடன்டியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் லலித் மற்றும் குகன் விவகாரத்திற்கும், இராணுவத்தினருக்கும் தொடர்புகள் இல்லை என்று, இராணுவப் பேச்சாளர் நுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்