siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

வெள்ளவத்தை மூவர் படுகொலை! சந்தேகநபர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் மூலம் தகவல்!

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வெள்ளவத்தை இராமகிருஷ்ண டெரஸ் பகுதியில் இடம்பெற்ற மர்ம மரணங்கள் தொடர்பில் இதுவரையில் 25இற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 18 இலட்ச ரூபாவிற்கும் அதிகமாக கடன் பெற்றிருப்பதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மர்மங்கள் தொடர்பிலான விசாரணைகள் பற்றி தொடர்புகொண்டு கேட்டபோதே பொலிஸார் இதனைத் தெரிவித்தனர்.
நேற்று முன்நாள் இரவு பிரதான சந்தேகநபர் அவருடைய சகோதரி ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி தகவல் ஒன்றினை அனுப்பியதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட செய்தி தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த மின்னஞ்சலானது இரத்மலானை பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றிலிருந்து அனுப்பப்பட்டதை கண்டறிந்துள்ளனர்