siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

“சீனா டவுன்“ இலங்கைக்கு வருகிறது!

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012மலேசியா,சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் செயற்படும் “சீனா டவுன்” (China Town) என்ற இரவுச்சந்தை அம்பாந்தோட்டைப் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இச்சந்தை, தினமும் காலை 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை திறந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புக்கள் மற்றும் சாதனங்களை இந்த “சீனா டவுன்” சந்தையில் விற்பனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்தால விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உத்தேச தொழில்நுட்ப பூங்கா என முன்மொழியப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சந்தையால் அதிகம் பயனடைவார்கள் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்